search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் கிரண்பேடி ஆய்வு"

    புதுவை கவர்னர் கிரண்பேடி ஆய்வின்போது புகார் மனுக்களை ஏற்க மறுப்பதால் தற்போது அவரை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. #KiranBedi
    புதுச்சேரி:

    கண்தானம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் மற்றும் சைக்கிள் ஓட்டி செல்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து கவர்னர் கிரண்பேடி தவளக்குப்பம் பகுதியில் கடந்த 3 வாரமாக சைக்கிளில் சென்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    அதுபோல் இன்று காலையும் கவர்னர் கிரண் பேடி தவளக்குப்பம் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் இருந்து அங்குள்ள ஊழியர்களுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி சென்றார். தானம் பாளையம், நல்லவாடு, புதுகுப்பம், பூரணாங்குப்பம் வழியாக சென்று பேரணி மீண்டும் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியை அடைந்தது.

    விழிப்புணர்வு பேரணி சென்ற இடங்களில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி அப்பகுதிகளில் குப்பைகள் அள்ளப்பட்டு சுகாதாரமாக இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தியையும் பாராட்டினார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி பேசும்போது, சுகாதாரத்தை பேணி காக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் என்றார்.

    கவர்னர் கிரண்பேடி முன்பெல்லாம் ஆய்வு செய்ய வரும்போது பொதுமக்கள் திரண்டு அவரை வரவேற்பார்கள். மேலும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்து வந்தனர்.



    ஆனால், நாளடைவில் கவர்னர் கிரண்பேடி புகார் மனுக்களை ஏற்க மறுத்து தன்னை கவர்னர் மாளிகையில் சந்தித்து குறைகளை தெரிவிக்குமாறு கூறியதால் தற்போது கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்ய வரும்போது அவரை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இன்று காலை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டபோது, இது வெளிப்பட்டது. அதுபோல் இன்றைய ஆய்வின் போது அதிகளவு போலீசாரும் பாதுகாப்புக்கு வரவில்லை. ஒருசில அதிகாரிகள் மட்டுமே உடன் வந்தனர். #KiranBedi


    கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்கள் எது நடந்தாலும் பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100 மற்றும் காவல் தொடர்பான புகார் வாங்க மறுத்தல், லஞ்சம் பெறுதல் போன்ற ரகசிய புகார்களை கவர்னர் உருவாக்கிய 1031 என்ற தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்த தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது.

    இது சம்மந்தமான புகாரின் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,

    கடந்த முறை ஆய்வு செய்தபோது புகார் சம்மந்தமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறியிருந்தார். அவற்றை ஏன் இன்னும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதுவரை பெற்ற புகார்கள் எவ்வளவு? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

    அதன் பின் 1031-க்கு வரும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

    புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கவர்னரின் தனி செயலர் சீனிவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்

    ×